ஏரோப்பிளேன் முதல் சைக்கிள் வரை கடித்துச் சாப்பிட்டு உணவாக்கிய அதிசய மனிதர்

பொதுவாக மனிதர்கள் எல்லோரும் வாய்க்கு உருசியாகவும் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் அல்லது சத்துமிக்கதுமான உணவுகளை உட்கொள்வதையே நாம் அறிந்திருப்போம் அது சாதாரணமானதாகும். ஒருசிலர் கொடிய நஞ்சுகொண்ட உயிரினங்கள் அல்லது புச்சி புளுக்கள் அல்லது வேறு ஏதேனும் உணவுகளை உண்பதையும் அறிந்திருப்போம். ஆனால் இந்த மனிதரோ நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொருட்களை எல்லாம் உண்டு தனது பசியைத் தீர்த்துக்கொண்டதோடு ஆரோக்கியமாகவும் வாழ்ந்திருக்கின்றார். 

 

விமானத்தை உணவாக உண்ட மனிதர்


குழந்தைகள் சிறுவயதிலிருந்தே காண்பதை எல்லாம் கையால் பிடித்து அதைக் கடிக்கவே விரும்புவர். ஆனால் காலப்போக்கில் அந்தப் பழக்கத்திலிருந்து மாறிவிடுவார்கள்.  அவ்வாறு மாறாமல் அதே பழக்கம் ஒருவரிடம் தீவிரமாகக் காணப்பட்டால் அப்பழக்கத்தை அல்லது அந்தச் செயலை மருத்துவ உலகம் ஒருவித மன நோய் என்று வரையறை செய்கின்றது. இந்நோய் இருப்பவர்களுக்கு காண்பதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். எதைக் கண்டாலும் “இன்னைக்கு ஒரு புடி எல்லாரும் வாங்க” என்பதுபோல் தோன்றுமாம். இந்நோயின் பெயர் “பிகா“ (pica Disorder) என்பதாகும். இந்நோய் உள்ளவர்கள் மண், சீமேந்து, கல், காகிதம், கண்ணாடி, உலோகப் பொருட்கள் போன்றவற்றை உண்ண விருப்பமாக  இருப்பர்களாம்.

 

மைக்கல் லோட்டிடோவின் உணவுப் பழக்கம்

1950ம் ஆண்டு பிரான்ஸில் பிறந்தவர்தான் மைக்கேல் லோட்டிடோ. ஆரம்பகாலங்களில் சாதாரணமாக இருந்த மைக்கேல் லோட்டிடோவுக்கு தனது 9வது வயதில் விசித்திரமான பழக்கம் ஏற்படுகிற்னது. இவருக்கு ஏற்பட்ட ஒருவித மனநோய் காரணமாக இயற்கை அல்லாத பொருட்களை எல்லாம் சாப்பிடத் தொடங்குகிறார். அன்றிலிருந்து ஒரு நாளைக்கு 900 கிராம் உலோகங்களை தினமும் தனது உணவாக உண்டு வந்திருக்கின்றார்.


அவர் இதுவரை சாப்பிட்ட பொருட்களின் பட்டியல்கள்

  • 18 துவிச்சக்கர வண்டிகள்
  • 15 பொருள் கொள்வனவு கூடைகள்
  • 07 தொலைக்காட்சிப் பெட்டிகள்
  • 06 மெழுகுவர்த்தி கூடுகள்
  • 2 கட்டில்கள்
  • 01 கணினி
  • புத்தகங்கள்
  • 01 விமானம்
  • 500 மெத்தைகள்
  •  கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ்

 

விமானத்தை உண்டாரா?



எவ்வளவு நாளைக்குத்தான் சின்னச்சின்னதா சாப்பிடுறது. பெரிசா ஏதாச்சும் சம்பவம் பண்ணுவம் என்று நினைத்த லோட்டிடோ  ஒரு சிறிய வகை விமானத்தை (Cessna 150 light aircraft)  உண்பதற்கு ஆரம்பித்துள்ளார். சிறு சிறு துண்டுகளாக மொத்த விமானத்தையும் வெறும் இரண்டு வருடங்களில் சாப்பிட்டு முடித்துள்ளார்.

 

அவருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படவில்லையா?

மைக்கல் லோட்டிடோ இவ்வாறு கண்ணில் படும் பொருட்களை எல்லாம் தனது உணவாக ஒரு புடி புடித்தாலும் அவரின் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.  ஏனெில் அவரது குடல், இரைப்பை,  இரைப்பையில் உள்ள செரிமான அமிலம் ஆகியவை எல்லாம் ஒரு சாதார மனிதரை விட பல மடங்கு பலமானதாக இருந்துள்ளது. அதுமட்டுமல்ல அவர் உலோகங்களை உண்ணும்போது தண்ணீரில் அல்லது எண்ணெயில் நனைத்து உண்டிருக்கின்றார். இவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் இவர் உடலில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அவர் ஆரோக்கியமாக உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

 

கின்னஸ் உலக சாதனை

இவரைப் போல் விசித்திரமான உணவுப் பழக்கம் கொண்ட பல நபர்கள் உலகில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் விட மைக்கல் லோட்டிடோவின் உணவுப் பழக்கம் விசித்திரமாக உள்ள என கருதிய கின்னஸ் அமைப்பு அவருக்கு  கின்னஸ் உலக சாதனை வழங்கியது. ஆனால் அந்த கின்னஸ் சாதனைச் சான்றிதழையும் கடைசில் அவர் உணவாக உட்கொண்டுவிட்டார். என்பதை நினைக்கையில் அவரைப் பற்றி என்னத்தச் சொல்ல என்று சிரிப்பதைப்போல்தான் உள்ளது.

 

அவரின் இறப்பு

இவர் தனது 57வது வயதில் 2007ம் ஆண்டு இறந்தார். ஆனால் அவரது இறப்பிற்குக் காரணம் அவர் உட்கொண்ட உணவுகள் அல்ல. அவர் இயற்கையாகவே இறந்துள்ளாார் என்பதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

 

Comments

Popular posts from this blog

புத்தகம் படித்தால் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலையா? (read book no jail)

சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா? உண்மையான விஞ்ஞான விளக்கம் இதோ!