Posts

Showing posts from May, 2025

புத்தகம் படித்தால் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலையா? (read book no jail)

Image
புத்தகம் படித்தால் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலையா?  அறிவின் இரத்தம் புத்தகம் என்னும் பொன்மொழி சொல்லும் புத்தகத்தின் மகத்துவத்தை. அந்தவகையில் ஒரு நல்ல புத்தகம் திறந்துகொண்டால் நரகத்தின் வாசல் மூடப்படும் என்பது போல் சிறச்சாலையில் இருந்து விடுதலை அடையவும் புத்தகம் உதவுகின்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அதை விளக்குவதே இப்பதிவு. சிறைத்தண்டனை பொதுவாக ஒருவரின் குற்றம் நிரூபி்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அத்தண்டனை முழுவதையும் அவர் அனுபவித்தாகவேண்டும். ஆனாலும் அவரின் தண்டனையானது சிறைக்காலத்தில் அவரின் நன்னடத்தை வெளிப்பாட்டின் அடிப்படையில் குறைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.   அல்லது கரண்டியால் சுரங்கம் தோண்டியோ அல்லது வாடனுக்கோ சிறைக்காவலருக்கோ கையுட்டு கொடுத்தோ தப்பித்தால்தான் உண்டு. இவ்வாறு புத்தகம் படித்தால் சிறைத்தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும் நாடுதான் பிரேசில் நாடு.   புத்தகம் வாசிக்கும் சிறைக்கைதி பிரேசில் நாடு ஏன் இந்த திட்டத்தைக் கொண்டு வந்தது? இந்தத் திட்டத்தை பிரேசில் அரசாங்கம் 2012ல் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. (Redemption of Reading) பிரேசி...

ஏரோப்பிளேன் முதல் சைக்கிள் வரை கடித்துச் சாப்பிட்டு உணவாக்கிய அதிசய மனிதர்

Image
பொதுவாக மனிதர்கள் எல்லோரும் வாய்க்கு உருசியாகவும் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் அல்லது சத்துமிக்கதுமான உணவுகளை உட்கொள்வதையே நாம் அறிந்திருப்போம் அது சாதாரணமானதாகும். ஒருசிலர் கொடிய நஞ்சுகொண்ட உயிரினங்கள் அல்லது புச்சி புளுக்கள் அல்லது வேறு ஏதேனும் உணவுகளை உண்பதையும் அறிந்திருப்போம். ஆனால் இந்த மனிதரோ நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொருட்களை எல்லாம் உண்டு தனது பசியைத் தீர்த்துக்கொண்டதோடு ஆரோக்கியமாகவும் வாழ்ந்திருக்கின்றார்.     குழந்தைகள் சிறுவயதிலிருந்தே காண்பதை எல்லாம் கையால் பிடித்து அதைக் கடிக்கவே விரும்புவர். ஆனால் காலப்போக்கில் அந்தப் பழக்கத்திலிருந்து மாறிவிடுவார்கள்.   அவ்வாறு மாறாமல் அதே பழக்கம் ஒருவரிடம் தீவிரமாகக் காணப்பட்டால் அப்பழக்கத்தை அல்லது அந்தச் செயலை மருத்துவ உலகம் ஒருவித மன நோய் என்று வரையறை செய்கின்றது. இந்நோய் இருப்பவர்களுக்கு காண்பதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். எதைக் கண்டாலும் “இன்னைக்கு ஒரு புடி எல்லாரும் வாங்க” என்பதுபோல் தோன்றுமாம். இந்நோயின் பெயர் “பிகா“ (pica Disorder) என்பதாகும். இந்நோய் உள்ளவர்கள் மண், சீமேந்து, கல், காகிதம...

சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா? உண்மையான விஞ்ஞான விளக்கம் இதோ!

Image
சிக்கன் சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்குமா? உண்மையான விஞ்ஞான காரணங்கள் மற்றும் ஆயுர்வேத விளக்கத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்.   உடல் சூடு எப்போது ஏற்படுகின்றது? உடல் சூடு ஏற்பட பல காரணங்கள் உண்டு என்று கூறப்படுகின்றது. அவ்வாறான சில காரணங்களைப் பார்ப்போம். சரியாக சாப்பிடவில்லை என்றால் உடல் சூடு அதிகரிக்கும் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடவில்லை என்றாலும் உடல் சூடு அதிகரிக்கும் எண்ணெய்யில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் உடல் சூடு அதிகரிக்கின்றது. இரவில் அதிக நேரம் கண்விழித்துக்கொள்வதாலும் உடல் சூடு அதிகரிக்கும். மனப்பதட்டம், பரபரப்பு டென்சன் என்பவற்றாலும் உடல் சூடு அதிகரிக்கும். பல உணவுகள் ஆயுள்வேதத்தில் உடல் சூட்டை அதிகரிப்பதாக கருதப்படுகின்றது. அந்த வகை உணவுகளில் கோழி இறைச்சி அதாவது நாட்டுக்கோழி அல்லது பிறாய்லர் சிக்கன் இறைச்சியும் உடல்சூட்டை அதிகரிப்பதாகக் கூறப்படுகின்றது. சிக்கன் ஒரு உயர் புரதன் கொண்ட உணவாகும்.   இதை செரிமானம் செய்யும்போது உடல் அதிகமான சக்தியைப் பயன்படுத்துகின்றது. இதை ”Diet – Induced Thermogenesis” அல்லது   ...